Saturday, February 21, 2009

தேடல்!

மீண்டும் பிரம்மச்சாரி
ஊர் கேட்க கத்தினேன்
நீ உன் பிறந்தகம் போன
அந்தக் கணத்தில்

உன் உத்தரவில்லா
உலகத்துள்
என் ஒருத்தனின் ராஜாங்கம்

தாமதமாய் விடியல்
பல் துலக்காமல் தேநீர்
ஆஷ் டிரேக்கு வெளியே
அணையாத சிகரெட் துண்டு
நண்பர்கள்
மதுக்கோப்பை
இறைச்சியின் எச்சம்

எல்லாமே
நான் மகிழ்ந்த கதை பேசின

பளீரென்று சிரிக்கும் பூ
பையப் பைய
வாடுதல் போல
என் அத்தனை உற்சாகமும்
ஓய்ந்து தீர்ந்தது
ஓரிரு நாளிலேயே

வீடு வெற்றிடமாய்
வெற்றிடமெல்லாம் நீயாய்
தெரிய
உன்னை நினைத்து நினைத்தே
வாழ்க்கை
சராசரிக்கும் கீழாய்
சரியத் தொடங்கியது

காமமாம்
இச்சையாம்
நான் உன்னை வேண்டுவதன்
காரணம் சொல்கிறான்
உளவியல் படித்த
நண்பன்

எவருமே உணரமுடியாத
என் உள்ளாடும்
தவிப்பை
எங்ஙனம் சிருஷ்டிப்பது
வார்த்தைகளாய்?

மிக நீண்ட பிரயத்தனத்திற்குப்
பின் சொல்கிறேன்
தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ...!

Writer:Unkown

10 comments:

புதியவன் said...

//மிக நீண்ட பிரயத்தனத்திற்குப்
பின் சொல்கிறேன்
தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ...!
//

தேடலின் வரிகள் அருமை...யாரோ எழுதியதை ரசித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திவ்யா...

நட்புடன் ஜமால் said...

\\காமமாம்
இச்சையாம்
நான் உன்னை வேண்டுவதன்
காரணம் சொல்கிறான்
உளவியல் படித்த
நண்பன்

எவருமே உணரமுடியாத
என் உள்ளாடும்
தவிப்பை
எங்ஙனம் சிருஷ்டிப்பது
வார்த்தைகளாய்? \\

மிகவும் அருமை திவ்யா ...

வெறும் வார்த்தைகளாய் அல்ல வாழ்க்கையாய் உணர்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

\\மிக நீண்ட பிரயத்தனத்திற்குப்
பின் சொல்கிறேன்
தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ...!\\

அற்புதம் ...

anbudan vaalu said...

\\மிக நீண்ட பிரயத்தனத்திற்குப்
பின் சொல்கிறேன்
தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ...!\\

மிக அருமையான கம்பேரிஸன்..

anbudan vaalu said...

\\மிக நீண்ட பிரயத்தனத்திற்குப்
பின் சொல்கிறேன்
தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ...!\\

மிக அருமையான கம்பேரிஸன்..

Muruganandan M.K. said...

அருமையான கவிதையை தேடி ரசித்து வலையேற்றியது மகிழ்வளிக்கிறது.

Bala said...

அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ...!

venkatx5 said...

//*
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ...!
*//
கலக்குறீங்க திவ்யா..
ஹ்ம்ம்.. இது மாதிரி நிறையா எழுதுங்க..

- இரவீ - said...

Divya,
மகளிர்தின வாழ்த்துக்கள்!!!

Saras said...

அன்னை

நான் பிறக்க தான் உழன்று , நான் வளர தான் தேய்ந்து , நான் சிரிக்க தான் அழுது , நான் படிக்க தான் கற்று, நான் மிளிர தான் அடங்கி , நான் வாழ தான் மடியும் என் தெய்வமே என் தாய்.