Monday, September 8, 2008

ஏன்?

அப்போது..
நான்
கவிதையெழுதி
காதலிக்கவில்லை
அவனை

மனித மந்தைகளின்
சூட்சம வலையில்
சிக்கிதவித்த போது
தந்தையின் வாசத்தை
அவன் மடியில் உணர்ந்து
என்
எண்ணக்குதிரையை
எனக்கே அரியாமல்
விரட்டியடித்து,

வெற்றியின் சுவையை
அரியவவைத்தவன்
அவன்..

கனவு என்பதை
கவிதையாக
காணச்செய்தவன்…

புள்ளியில் தொடங்கி
அழகான கோலத்தில்
முடிக்கும் திறமையை
சிற்பியாக இருந்து
செதுக்கி ரசித்தவன் அவன்…

வெயிலின் அருமையை
வெயிலில்லேயே உணரச்சொன்னவன்..
கொட்டும்
ஒற்றை மழைத்துளியை
கயிரெனக்கொண்டு
வானமடையும் வித்தையை
சொன்னவன்..

என் மூச்சே
அவனென்றிருக்க
ஒருநாள்
அவன் சுவாசிப்பதை
நிறுத்திக்கொண்டான்..

ஏன்? எதனால்?
என்று அறியும்
தைரியமில்லாமல்
காலத்தின்
கட்டளையாக
அவனின்
எண்ணக்குதிரையில்
பயணித்துக்கொண்டு…
கவிதைகளும் எழுதுகின்றேன்
இப்போது...