Wednesday, November 5, 2008

என் கனவுலகில்.....

நம் இருவருக்கான உலகம் இது...
இங்கு விடியலே இல்லை...
இரவு மட்டும் தான் ...
இருபத்தி நான்கு மணிநேரமும்...

நான் காத்துக் கொண்டிருப்பேன்...
தங்களின் வருகைக்காக...
கனவுகளில்...!!
காலமெல்லாம் நான் ரசிக்கும் தங்கள்...
முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்!
சமைப்பேன், துவைப்பேன், துடைப்பேன்...
என் கனவுலகில்...
தங்கள் இல்லத்தரசியாய்!!!

என் கவிதைகளைக் கொடுப்பேன்...
உங்கள் விமர்சனத்தைக் கேட்பேன்...
உங்கள் கவிதைகளை படிப்பேன்...
ரசிப்பேன்...

நம் இருவருக்கான இந்த உலகம்...
எப்போதும் இரவாகவே இருக்கட்டும்...
விடியவே வேண்டாம்...!!

5 comments:

Princess said...

மீ த பஸ்ட்!!!

சூப்பரா இருக்கு பதிவு....எத்தனை அழகான வார்த்தைகள்

1st பாராவும் 2nd பாராவும் தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு

நவீன் ப்ரகாஷ் said...

அழகான கவிதை திவ்யா.. !! மிகவும் ரசித்தேன்... !!

Unknown said...

திவ்யா,
ரசித்தேன்
உஙகள் வலைப்பூவிற்கு முதல் முதலாக வருகிறேன்.நான் புதிய பதிவர். என் வலைக்கு வந்து கருத்து சொல்லலாம்.raviaditya.blogspot.com. ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.

அன்புடன்
கே .ரவிஷங்கர்

Karthik said...

vidiyale illai nu padhicha udane ennada love failure poala iruku nu ninachen.. aana adhuthu potheenga paaru....

நான் காத்துக் கொண்டிருப்பேன்...
தங்களின் வருகைக்காக...
கனவுகளில்...!!

Chance illanga!! Super po(em)st

ப்ரதீபா said...

மிகவும் ரசித்தேன், கவிதை அருமையிலும் அருமை:))