Tuesday, November 11, 2008

உன்னாலே !.....உன்னாலே !

நீ எழுதுவதாலேயே ...
நான் உன் கவிதைகளை படித்தேன் !

நீ எதைப்பற்றி எழுதினாலும் ...
அது என்னைபற்றித்தான் என்று நினைத்தேன் !

ஓர் நாளாவது ...
உன் எழுதுகோளாக மாட்டேனா என்று தவித்தேன் !
அட அந்த தாளாகவாவது ,
என்னை நினைத்துக்கொள்ள மாட்டாயா என்று துடித்தேன் !

உன் நினைவுகள் ...
என்னை வாட்டுவதை நானே கொஞ்சம் ரசித்தேன் !
உன்னாலேயே ...
நான் இந்த கவிதையை எழுதி முடித்தேன் !

5 comments:

ப்ரதீபா said...

அருமை:-)))

நவீன் ப்ரகாஷ் said...

அழகான கவிதை திவ்யா...?? யார் கவிஞர்...?? மிக
அழகாக எழுதியிருக்கிறார்... !!! :)))

அனைத்துமே ரசித்தேன்...:))

நட்புடன் ஜமால் said...

//உன் நினைவுகள் ...
என்னை வாட்டுவதை நானே கொஞ்சம் ரசித்தேன் !//

அழகு ...

Princess said...

அழகு கவிதை, திவ்யா!

- இரவீ - said...

//நீ எதைப்பற்றி எழுதினாலும் ...
அது என்னைபற்றித்தான் என்று நினைத்தேன் //
நான்கூட தாங்க ... அதனால தான் உங்களுக்கு என் 'பட்டாம்பூச்சி விருது'.

http://blogravee.blogspot.com/2008/12/blog-post_31.html