Wednesday, November 19, 2008

ஓர் இரவு.....போதுமா??

இரவெல்லாம்
பேச வேண்டும்,
கனவுகளை,
கண்ணீரை,
கவிதையை,
ஏமாற்றத்தை,
எழுச்சியை,
துயரத்தை…..
எல்லாவற்றையும்..
ஊர் உறங்கிப்போன பிறகும்
உன்னை கேட்டபடி நானோ..
என்னை கேட்டபடி நீயோ…
நெட்டி தள்ளும்
உறக்கத்தோடு
நான்
உன் மடியிலோ
நீ
என் மடியிலோ
கண்ணயர வேண்டும்…
காலமெல்லாம் இது வேண்டும்!!!

8 comments:

நவீன் ப்ரகாஷ் said...

//உன்னை கேட்டபடி நானோ..
என்னை கேட்டபடி நீயோ…
நெட்டி தள்ளும்
உறக்கத்தோடு
நான்
உன் மடியிலோ
நீ
என் மடியிலோ
கண்ணயர வேண்டும்…//

மிக அழகான வரிகள் திவ்யா...:))

ரசித்தேன்... மிகவும்...:))

அருள் said...

உங்கள் உணர்வும்..சிந்தனையும்..கவிதையும்.. அழகு

ப்ரதீபா said...

விருப்பம் நிறைவேறட்டும்:)
கவிதை நன்று.

Karthik said...

neendum oru arumaiyana kavidhai.. idhula rombha pidhichadhu.. avan, aval nu aan paal, pen paal edhuvum kuripidaama eludhi irukeenga. idhai oru aan solvadagavum illai pen solvadaagavum edhuthukalam!!!

Princess said...

//உன்னை கேட்டபடி நானோ..
என்னை கேட்டபடி நீயோ…
நெட்டி தள்ளும்
உறக்கத்தோடு
நான்
உன் மடியிலோ
நீ
என் மடியிலோ
கண்ணயர வேண்டும்…//
அழகு வரிகள் திவ்யா...Simply Cute and Super!

priyamudanprabu said...

நல்லாயிருக்கு

காரூரன் said...

உங்கள் பக்கமும் கவிதையும் அருமை. நல்ல ரசனை இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

Natchathraa said...

//உன்னை கேட்டபடி நானோ..
என்னை கேட்டபடி நீயோ…
நெட்டி தள்ளும்
உறக்கத்தோடு
நான்
உன் மடியிலோ
நீ
என் மடியிலோ
கண்ணயர வேண்டும்…
காலமெல்லாம் இது வேண்டும்!!!//

azhagana varigal.. migavum rasithaen...