Monday, January 5, 2009

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

சிரித்துக்கொண்டே நீ பேசிய
நம் முதல்
தொலைபேசி உரையாடல்.......

அழகான வரிகளோடு
மின்னஞ்சலில் நீ
அனுப்பிய வாழ்த்து அட்டைகள்...

வார்த்தைகளை தேடிபிடித்து
ஆறுதலாக எழுதின
உன் கவிதை தொகுப்புகள்....

என் வெக்கத்தைப் பற்றி
கவி எழுதி என்னை
வெட்கப்பட வைத்த வரிகள்....

நேரம் போவதறியாது
விரல்கள் வலிக்க வலிக்க
டைப்படித்த நீண்ட நேர அரட்டைகள்..

அவசரத்தில் அனுப்பிய மின்னஞ்சல்,
யோசித்து யோசித்து
எழுதியனுப்பிய நீண்ட இமெயில்கள்.......

என நமக்குள் நடந்தது
அனைத்தையும் பொத்தி பொத்தி
வைத்திருக்கிறேன் என் காதல் கருவறையில்!!!

16 comments:

நட்புடன் ஜமால் said...

\\"பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!"\\

அழகு ...

நட்புடன் ஜமால் said...

\\என நமக்குள் நடந்தது
அனைத்தையும் பொத்தி பொத்தி
வைத்திருக்கிறேன் என் காதல் கருவரையில்!!!\\

மிக மிக அழகு ...

நட்புடன் ஜமால் said...

இக்கவிதை இரசித்ததா அல்லது வடித்ததா ...

Divya said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

\\"பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!"\\

அழகு ...\\

நன்றி ஜமால்!!

அதிரை ஜமால்.....நட்புடன் கரம் நீட்ட அரம்பிச்சாச்சா??
நல்லது!!

Divya said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

\\என நமக்குள் நடந்தது
அனைத்தையும் பொத்தி பொத்தி
வைத்திருக்கிறேன் என் காதல் கருவரையில்!!!\\

மிக மிக அழகு ...\\


நன்றி!!

Divya said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

இக்கவிதை இரசித்ததா அல்லது வடித்ததா ...\\


ரசிப்புடன்......வடித்தது!!!

புதியவன் said...

//என் வெக்கத்தைப் பற்றி
கவி எழுதி என்னை
வெட்கப்பட வைத்த வரிகள்..../

அழகான வெட்கம் அழகோ அழகு...

அ.மு.செய்யது said...

//என் வெக்கத்தைப் பற்றி
கவி எழுதி என்னை
வெட்கப்பட வைத்த வரிகள்....
//

அழகான வரிகள்...காதல் தான் எத்தனை அழகு.

அ.மு.செய்யது said...

//என நமக்குள் நடந்தது
அனைத்தையும் பொத்தி பொத்தி
வைத்திருக்கிறேன் என் காதல் கருவரையில்!!!//

இப்படி நிறைய பேர் சுமந்து கொண்டிருக்கிறார்கள். சுகமான சுமைதானென்பதாலா ?

நவீன் ப்ரகாஷ் said...

பொத்தி வைத்த நினைவுகள் இவ்வளவா..?? மிகவும் அழகாக மணம் வீசுகின்றன திவ்யா... :)))

நவீன் ப்ரகாஷ் said...

சாதாரண வரிகளில் அசாதாரண உணர்வுகள்... மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்றன... அழகோ அழகு... :)))

நவீன் ப்ரகாஷ் said...

பத்திரமாய் வைத்திருந்த உணர்வுகளை அழகாய் சொன்ன கவிஞருக்கு என்ன பரிசு தரலாம்..? :))))

- இரவீ - said...

திவ்யா,
பொத்திவச்ச மல்லிக மொட்டா நீங்க ?
பாட்டு நியாபகம் இருக்கா "பொத்திவச்ச மல்லிக மொட்டு ... வெக்கத்துல ... "

பொதுமக்களே !!!- மேலேயுள்ள பாட்ட கேட்டுகிட்டே ரெண்டு முறை இந்த பதிவ படிச்சு பாருங்க... (பின் விளைவுக்கு திவ்யா தான் பொறுப்பு).

Karthik said...

//என் வெக்கத்தைப் பற்றி
கவி எழுதி என்னை
வெட்கப்பட வைத்த வரிகள்....//

Praamaadam

Puthaandhu vaalthukkal!!

Princess said...

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய் - Very True, FACT, நிஜம், உண்மை, மெய், எல்லா காதலர்களும் செய்யும் ஒரு காரியம்..ரொம்ப நல்லா இருக்கு

நட்புடன் ஜமால் said...

\\Blogger Divya said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

இக்கவிதை இரசித்ததா அல்லது வடித்ததா ...\\


ரசிப்புடன்......வடித்தது!!!\\

உங்கள் பின்னூட்டம் கூட ஊட்டம் தருவதாய் - ம்ம்ம் அருமை.