Wednesday, January 14, 2009

என் காதலே!.......என் காதலே!!

குட்டி குட்டி கோபங்கள்
சின்ன சின்ன சண்டைகள்
ரசிக்கவைக்கும் ஊடல்கள்
ஏங்க வைக்கும் கொஞ்சல்கள்
மிஞ்சவைக்கும் கெஞ்சல்கள்..
இன்னும் எத்தனை எத்தனை
இன்பம் வைத்திருக்கிறாய்
என் காதலே... ? !

13 comments:

நட்புடன் ஜமால் said...

குட்டியாய் ஒரு கவிதை

பெரிய காதல் பற்றி ...

நட்புடன் ஜமால் said...

\\ஏங்க வைக்கும் கொஞ்சல்கள்
மிஞ்சவைக்கும் கெஞ்சல்கள்..\\

அழகு வரிகள் ...

நட்புடன் ஜமால் said...

\\இன்னும் எத்தனை எத்தனை
இன்பம் வைத்திருக்கிறாய்
என் காதலே... ? !\\

முடிந்துவிடம் விஷயங்களா ...

காதல் பெறுக பெறுக பெற்றுக்கொண்டே இருக்க வேண்டியது தான் இன்பங்களை

நவீன் ப்ரகாஷ் said...

:)) Nice Feelings..ilayaa Divyaa ?? :))

புதியவன் said...

ரொம்ப அழகா இருக்கு
காதலின் உணர்வுகள்...

அ.மு.செய்யது said...

//இன்னும் எத்தனை எத்தனை
இன்பம் வைத்திருக்கிறாய்
என் காதலே... ? !
//

இன்னும் நிறைய....இங்கே வெற்றுக் காகிதமும் மெளனமும் கூட அழகு தான்.
உங்க‌ள் க‌விதையும் கூட‌.......

பிரியமுடன்... said...

அப்பா கவிதை எழுதி
ஆனந்த படுத்திய வேகத்தில்
காதல் கவிதையா....

காதல் கவிதையோடு இருக்கட்டும்
கவனம் மற்றவற்றில் மலரட்டும்!

பிரியமுடன்... said...

அப்பா கவிதையை போட்டு
அசத்திவிட்டு இப்ப
காதல் கவிதையை போட்டு
கவுத்துபுட்டியம்மா...கவுத்துபுட்டியே..
யாரு கவுத்ததுன்னு எனக்கு புரியல
கவருகின்றது அனைவரையும் உன்
கவிதை....
கலர் கலராய் கவிதைகள்
வண்ணத்துக்குள் வாழும் பருவம்!
வாழுங்கள்...வாழ்த்துக்கள்!
அண்ணனாய் இருந்து ஆசிர்வதிக்கிறேன்..

butterfly Surya said...

சுட்டி பெண்ணின் குட்டி கவிதை சூப்பர்.


வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா இந்தப்பக்கத்துக்குள்ள இவ்வளவு இருக்கா ...
எனக்கு படிக்க சந்தர்ப்பம் இல்லையே, எப்ப எழுதுறிங்க எப்ப தமிழ் மணத்துல இணைக்கிறிங்க...
பாக்கப்போனா உங்களுக்கு பின்னூட்டம் எழுதவே நேரம் போதாது போல இருக்கே...:)


கலக்குங்க மாஸ்டர்...

priyamudanprabu said...

அழகு வரிகள் ...

நான் said...

லட்சோப லட்சம்

Princess said...

நச்சுன்னு காதலைப் பற்றிய உங்க கவிதை என்னை என்னவோ பண்ணுது...
அழகு..