Tuesday, November 25, 2008

'தாய்' - சிறுகுறிப்பு வரைக

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!"

-
மின்னஞ்சலில் நண்பன் பகிர்ந்துக்கொண்ட கவிதை

Wednesday, November 19, 2008

ஓர் இரவு.....போதுமா??

இரவெல்லாம்
பேச வேண்டும்,
கனவுகளை,
கண்ணீரை,
கவிதையை,
ஏமாற்றத்தை,
எழுச்சியை,
துயரத்தை…..
எல்லாவற்றையும்..
ஊர் உறங்கிப்போன பிறகும்
உன்னை கேட்டபடி நானோ..
என்னை கேட்டபடி நீயோ…
நெட்டி தள்ளும்
உறக்கத்தோடு
நான்
உன் மடியிலோ
நீ
என் மடியிலோ
கண்ணயர வேண்டும்…
காலமெல்லாம் இது வேண்டும்!!!

Tuesday, November 11, 2008

உன்னாலே !.....உன்னாலே !

நீ எழுதுவதாலேயே ...
நான் உன் கவிதைகளை படித்தேன் !

நீ எதைப்பற்றி எழுதினாலும் ...
அது என்னைபற்றித்தான் என்று நினைத்தேன் !

ஓர் நாளாவது ...
உன் எழுதுகோளாக மாட்டேனா என்று தவித்தேன் !
அட அந்த தாளாகவாவது ,
என்னை நினைத்துக்கொள்ள மாட்டாயா என்று துடித்தேன் !

உன் நினைவுகள் ...
என்னை வாட்டுவதை நானே கொஞ்சம் ரசித்தேன் !
உன்னாலேயே ...
நான் இந்த கவிதையை எழுதி முடித்தேன் !

Wednesday, November 5, 2008

என் கனவுலகில்.....

நம் இருவருக்கான உலகம் இது...
இங்கு விடியலே இல்லை...
இரவு மட்டும் தான் ...
இருபத்தி நான்கு மணிநேரமும்...

நான் காத்துக் கொண்டிருப்பேன்...
தங்களின் வருகைக்காக...
கனவுகளில்...!!
காலமெல்லாம் நான் ரசிக்கும் தங்கள்...
முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்!
சமைப்பேன், துவைப்பேன், துடைப்பேன்...
என் கனவுலகில்...
தங்கள் இல்லத்தரசியாய்!!!

என் கவிதைகளைக் கொடுப்பேன்...
உங்கள் விமர்சனத்தைக் கேட்பேன்...
உங்கள் கவிதைகளை படிப்பேன்...
ரசிப்பேன்...

நம் இருவருக்கான இந்த உலகம்...
எப்போதும் இரவாகவே இருக்கட்டும்...
விடியவே வேண்டாம்...!!