Thursday, June 4, 2009

யுத்த நினைவுகள்......

நம்...
சின்ன சின்ன சண்டைகளும்,
செல்ல செல்ல கோபங்களும்,
எத்துனை ஆழமாக காயப்படுத்தினாலும்...

உன்...
மன்னிப்பு கெஞ்சல்களும்
சிணுக்கமான என் சிணுங்களும்
அத்துனை வேகமாக காயத்தை ஆற்றும்!!

மீண்டும் ஒருமுறை
நமக்குள் 'யுத்தம்' நிகழாதா??
மறுமுறை போர்தொடுக்கும்
திட்டம் ஏதும் உன் கைவசம் இல்லையா??
என என் உள்மனம் ஏங்குகிறது.....

Tuesday, May 26, 2009

முத்த நினைவுகள்.....

எதிர்பாரா தருணத்தில்
மின்னலாய் நீ தந்த முத்தம்....
மறுமறுக்க மீறியபடி
அழுத்தமாய் நீ தந்த முத்தம்...
கூடிய பொழுதின்
முடிவில் நீ தந்த முத்தம்...
என அனைத்தும் மொத்தமாய்
நினைவில் வந்து
இப்போது....
கண் கலங்க வைக்கிறது!!

Wednesday, May 13, 2009

உன் நினைவுகள்...

அருகம்புல்லின் பனித்துளியாய்
அதிகாலையில் ஏனோ
உன் நினைவுகள்.............

துயில் கலைந்த நான் நிழலாய்
உனை தேடிய போது
நிஜங்கள் நினைவுகளை கனவென்றென............

காலை நேரத்து உறக்கம்
இன்னும் மிச்சமிருந்தது......

மனம் ஏனோ கசந்தது.........
தொலைத்து விட்ட
உற்க்கத்திற்காகவும் அல்ல......
கலைந்து விட்ட
கனவுகளுக்காகவும் அல்ல..

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக.

Source: FWD email.

Wednesday, April 22, 2009

அம்மா, வருவாளா???

பசிக்கிறது...
அழும் சத்தம்
களை எடுக்கும் அம்மாவின்
காதில் விழுமோ
மரத்தின் கிளையில்
சேலை கட்டித் தொங்கவிட்டு
தூங்கவைத்து போன அம்மா...

நிழலில் நான்...
வெயிலில் உருகி உருகி
அம்மா தினமும்
வேகும் நினைப்பு வரும்
வரும் அழுகையை அடக்கியே
அமைதியாகிப் போவேன்
ஆடாத தொட்டில்
உச்சி வெயில் அடிக்க
உறங்கியது போல இருப்பேன்
ஓடி வந்து பார்ப்பாள்
ஓரக்கண்ணால் ரசிப்பேன்
பசிக்குமே பிள்ளைக்கு என
என்னைத் தூக்கி
மார்போடு அணைக்கையில்
எனக்கு கண்ணீர் முட்டும்...

உலகத்தில் உள்ள
குழந்தைகளுக்கெல்லாம்
ஒரு தாய் இருக்கக்கூடாதோ
ஆதரவற்ற பிஞ்சுகளை
நினைத்து என் நெஞ்சு
கனத்துப் போகும்
மொழி பேசத் தெரிந்ததும்
அம்மாவிடம் இதைதான்
கேட்கவேண்டும் என இருக்கிறேன்
அம்மா இல்லாத பிஞ்சுக்கெல்லாம்
அழுதபோதாவது அம்மா வருவாளா...

---

Written by: Venkadarengan

Thursday, April 9, 2009

நட்பின் ஆழம்...!

ஒவ்வொரு நாளும்
தொடர்வண்டி பயணச்சீட்டு
எடுக்கும் வேளையெல்லாம்
நினைப்பதுண்டு
இன்றாவது உன்னை
சந்திக்கமாட்டோமா என்று

என்றாவது ஒருநாள்
நாம் சந்திக்கும் போது
நிற்க நேரமின்றி
பேசிக்கொள்ள வேண்டும்
இருவரில் ஒருவரேனும்

இல்லாதபோதும் தேடி
எடுத்த இரண்டு நிமிடத்தில்
இரண்டாண்டு நினைவுகளை
இரத்தின சுருக்கமாக
பரிமாற வேண்டும்

இரண்டாவது நிமிடத்தின்
கடைசி நொடியில்
உனது கைப்பையில்
தேடியும் கிடைக்காத காகிதத்தால்
என்றாவது இதுபோல்
பயன்பெற வேண்டுமென்று
எனது பையில் சேகரித்த
பயணசீட்டில்
பரிமாறிக்கொள்ள வேண்டும்
ஒருவரின் தொடர்புக்காண
எண்ணை மட்டும்

எனது விருப்பமெல்லாம்
இதுதான்…..
கேட்பது நீயாக இருக்க வேண்டும்
கொடுப்பது நானாக இருக்க வேன்டும்
அப்பொழுதுதான்
உன் மீதான என் நட்பின்
ஆழம் அறியப்படும் !

-அமைதிப்ரியன்

Sunday, March 1, 2009

நட்பினால் காதல்???

நல்ல நட்பின் புரிதலில்
நல்ல காதல் வந்துவிட்டது
என்கிறாய்??

காதல் வந்தபின் - அந்த
நல்ல நட்பு காணாமல்
போய்விட்டதை உணர்ந்தாயா??

தோழனாக தோள் சாயவும் முடியாமல்
காதலனாக கவி பாடவும் முடியாமல்
நட்பை உடைத்து கண்டபடி கஷ்டபடுத்தும்
இந்த காதல் இனிமையானதா??

எழுதியவர்:கலா ரசிகை

Saturday, February 21, 2009

தேடல்!

மீண்டும் பிரம்மச்சாரி
ஊர் கேட்க கத்தினேன்
நீ உன் பிறந்தகம் போன
அந்தக் கணத்தில்

உன் உத்தரவில்லா
உலகத்துள்
என் ஒருத்தனின் ராஜாங்கம்

தாமதமாய் விடியல்
பல் துலக்காமல் தேநீர்
ஆஷ் டிரேக்கு வெளியே
அணையாத சிகரெட் துண்டு
நண்பர்கள்
மதுக்கோப்பை
இறைச்சியின் எச்சம்

எல்லாமே
நான் மகிழ்ந்த கதை பேசின

பளீரென்று சிரிக்கும் பூ
பையப் பைய
வாடுதல் போல
என் அத்தனை உற்சாகமும்
ஓய்ந்து தீர்ந்தது
ஓரிரு நாளிலேயே

வீடு வெற்றிடமாய்
வெற்றிடமெல்லாம் நீயாய்
தெரிய
உன்னை நினைத்து நினைத்தே
வாழ்க்கை
சராசரிக்கும் கீழாய்
சரியத் தொடங்கியது

காமமாம்
இச்சையாம்
நான் உன்னை வேண்டுவதன்
காரணம் சொல்கிறான்
உளவியல் படித்த
நண்பன்

எவருமே உணரமுடியாத
என் உள்ளாடும்
தவிப்பை
எங்ஙனம் சிருஷ்டிப்பது
வார்த்தைகளாய்?

மிக நீண்ட பிரயத்தனத்திற்குப்
பின் சொல்கிறேன்
தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ...!

Writer:Unkown

Wednesday, February 11, 2009

கனவில் அரங்கேறிய..... 'இல்லறம்'!!!

காலையில்...
நீ அலுவலகம் சென்றதும்
உன் செல்பேசி அழைப்புக்காக
நாளெல்லாம் காத்திருப்பேன் நான்..
வேலையில் மறந்து விட்டேன் என்பாய் நீ!


மாலையில்...
உன்னிடம் பகிர
சின்ன சின்ன சேதியுடன்
காத்திருப்பேன் நான்...
முழுவதும் கேட்காமல்
அவ்வளுவு தானே என தேநீர் பருகுவாய் நீ!


உனக்காகவே புத்தாடை
உடுத்தி நிற்பேன் நான்...
என்னை ரசிக்காமல்
தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பாய் நீ!


உன்னிடம் கோபம் கொண்டு
பேசாமலிருப்பேன் நான்
கண்டுக்கொள்ளாமல்
வலைதளங்களில் ஆழ்ந்திருப்பாய் நீ!


இரவில்....
உனக்கான என் கனவுகளுடன்
கண் மூடிக்கொண்டிருப்பேன் நான்...
தட்டி எழுப்பாமல்
மெளனமாக என்னுடன் பேச ஆரம்பிப்பாய்...
'அந்த' கணம்
அந்தனை குறைகளையும்
நிறைவாக்கி விடுகிறாயே
என் செல்ல திருடா!!

Monday, January 26, 2009

தொடரும் நட்பில்.......அளவு கோள்!

தோன்றிய பொழுது எல்லாம்
தொலைபேசியை சுழற்றி
தொன தொன என்று
பேசிய நாட்கள்
உன் திருமணத்துக்கு
பிறகும் ……
தொடருமா? என்று
கேட்டதற்கு …
நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு
என்று நீ கூறிய
வார்த்தை மட்டும்
இன்று என் வசம்!

தோழமையுடன்,
உன் தோழன்.

Wednesday, January 21, 2009

குரல் கேட்காதா ?

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

இன்னும் உறங்கும் நண்பன்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..



இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன்.

Wednesday, January 14, 2009

என் காதலே!.......என் காதலே!!

குட்டி குட்டி கோபங்கள்
சின்ன சின்ன சண்டைகள்
ரசிக்கவைக்கும் ஊடல்கள்
ஏங்க வைக்கும் கொஞ்சல்கள்
மிஞ்சவைக்கும் கெஞ்சல்கள்..
இன்னும் எத்தனை எத்தனை
இன்பம் வைத்திருக்கிறாய்
என் காதலே... ? !

Saturday, January 10, 2009

அப்பா....

ஆயிரம் முறை
தலைவாரிய
சந்தோஷம்...
அப்பா
ஒரேயொருமுறை
தலை கோதிவிடும்
போது!!

மனசுக்குள்
லேசாக பதறினாலும்
எது காட்டிக்கொடுக்கிறது
அப்பாவிற்கு மட்டும்????

ஒரே பார்வையில்
நானிருக்கிறேன் உனக்கென்று
உணர்த்த எப்படி முடிகிறது
அப்பாவிற்கு மட்டும்???

இத்துனை புரிதலும்
பரிவான பாசமும்
காட்டுகிறாயே...
எந்தப் பாசப்படியை
கொண்டு அளந்து
பார்ப்பேன்..?

அளந்திடத்தான் முடியுமா
அப்பா காட்டும் அன்பை!!!

-----

நண்பர் 'நட்புடன் ஜமாலின்' வேண்டுகோளுக்கு இணங்க.......என் வலைதளத்தில் 'என் வசம் ....நானில்லை' தொடர் கதைக்காக எழுதிய கவிதையை இங்கே பகிர்கிறேன்.

Monday, January 5, 2009

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

சிரித்துக்கொண்டே நீ பேசிய
நம் முதல்
தொலைபேசி உரையாடல்.......

அழகான வரிகளோடு
மின்னஞ்சலில் நீ
அனுப்பிய வாழ்த்து அட்டைகள்...

வார்த்தைகளை தேடிபிடித்து
ஆறுதலாக எழுதின
உன் கவிதை தொகுப்புகள்....

என் வெக்கத்தைப் பற்றி
கவி எழுதி என்னை
வெட்கப்பட வைத்த வரிகள்....

நேரம் போவதறியாது
விரல்கள் வலிக்க வலிக்க
டைப்படித்த நீண்ட நேர அரட்டைகள்..

அவசரத்தில் அனுப்பிய மின்னஞ்சல்,
யோசித்து யோசித்து
எழுதியனுப்பிய நீண்ட இமெயில்கள்.......

என நமக்குள் நடந்தது
அனைத்தையும் பொத்தி பொத்தி
வைத்திருக்கிறேன் என் காதல் கருவறையில்!!!