Wednesday, July 16, 2008

இணை பிரியா இணைய நட்பு !!!

என் கவிதை ரசனைக்கு
நவரசமாய் கிடைத்தது - ஒரு
இணைய நட்பு!

கவிதைக்கு மட்டுமில்லை
நண்பா! - கலங்கிடாதே
கண்ணுக்குள் மணியாய்
இணை பிரியா நட்பு
இந்த இணைய நட்பு!!

"கருத்து வேறுபாடு ஒன்றும்
தடையில்லை நம் நட்புக்கு!"
கிடைத்த உன் நட்பு எனக்கு
பொக்கீஷம்
கடவுளுக்கே என் முதல் நன்றி!

கவியில் இன்னும் நடைபழகும்
குழந்தைதான் நான்! - ஆனாலும்
காத்திருந்து கிடைத்த உன் நட்புக்கு
தந்தேன் கவிதையை பரிசாய் உனக்கு!

சண்டை போடவா
நம் நட்பு??
இல்லை
திட்டிக்கொள்ளவா? -
இரண்டுமே நம் நட்பினை வெளிப்படுத்த
நாம் கூறிக்கொள்ளும்
சாக்குபோக்கு!!

-திருமதி. அஸ்மா