Wednesday, July 16, 2008

அன்பு மகளே......கண்மனி!!

என் அன்பு மகளே...

என் விடியல்
என்றும் உனக்கானது...

என் உள்ளத்தின்
உற்சாகம்
உன் புன்னகையில்...

ஆனால் புதிதாகவும்,
நான் காணும்போது
புதிராகவும்
மறைக்கப்படும்
உன் நாணம்...

என்னுடனான
உன் நட்பு
இன்று
எல்லைகளுடன்...

நீ உதறிவிட்ட
என் நினைவுகள்
அனாதைகளாய்
என் முன்னே...

தனிமையில்
கனவுகள் காண்கிறாய்...
உறக்கம், உணவு
தொலைக்கிறாய்
உண்மை கேட்டால்
வெடிக்கிறாய்...

காதல் கனவுகளில்
காலத்தைத்
தொலைத்து விடாதே..
கானல் நீராக
காணாமல் போய்விடாதே...

காலச்சக்கரத்தில்
உண்மைக்காதல்
உன்னைத்தேடி வரும்...
வாழ்க்கைச்சக்கரத்தில்
தேடும்போது வாராது
இளமைப்பருவம்...

அன்னை என்
அழுகுரல்
கேட்கிறதா கண்மனியே???

-கவிஞர் மலர்