Sunday, August 10, 2008

சந்திக்காமலே இருந்திருக்கலாம்.....

நான் நானாகவே
இருந்திருக்கலாம்

நீ நீயாகவே
இருந்திருக்கலாம்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாரோ என்றே
வாழ்ந்திருக்கலாம்

நான் உன்
எழுத்துக்களை
ரசிக்காமல்
போயிருந்தால்

நீ என்னை
நட்போடு
பார்க்காமல்
போயிருந்தால்

இப்படி அன்பில்
திளைத்து
ஒன்றுக்குள் ஒன்றாக
நட்புடன் பழகிவிட்டு

ஒவ்வொன்றாக வலியோடு
பிரியாமல் போயிருப்போம்.