Wednesday, September 3, 2008

ஏதேதோ...நினைவு!

எங்கெங்கோ.....
பிறந்தோம்!

எங்கெங்கோ
வளர்ந்தோம்!

ஆயினும் நாம்
ஒன்றாக பயணித்த
சில நினைவுகள்.....!

தினம் தினம்
வந்து போகின்ற
பேருந்து வரலாம்
வராமல் போகலாம்
வழித்தடமும் மாறலாம்
ஆனால்

நீ மட்டுமே.....
வந்து வந்து போன
சில நினைவுகள்.....!
மனம் விட்டு
பேசிய சில வார்த்தைகள்
வாய்விட்டு சிரித்த
சில நேரங்கள்

உதட்டளவு உறவினை
உதறித் தள்ளிவிட்டு
உள்ளத்தளவில்
உறவினை வளர்த்து
உயிர் வாழ்வோமெனச் சொன்ன
உன் நினைவுகளால்.....!

மறக்க முடியாத
உறவுகளைச் சுமந்து
ஊனமாய் போன உடம்புடன்
நான் மட்டும்
நித்திரை இல்லாத
நினைவுகளோடு.....
இன்னும்

5 comments:

நவீன் ப்ரகாஷ் said...

இது திவ்யா எழுதின கவிதையா..?
நல்லா இருக்கு... :)))

ஸ்ரீ said...

Romba nalla irukunga kavidhai. Vaazthukkal divya ji.

anbudan vaalu said...

very cute.......

kalil said...

nalla kavithai vasithen thozli. valthukkal

Venkata Ramanan S said...

Dat was a good 1:)