Wednesday, December 24, 2008

நீ இல்லாத தருணங்கள்...

முகவரி இல்லாத கடிதம் போல்
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு இருக்கிறேன் !

முதல் வாய் சோற்றில்
தவறாமல் புரை ஏறுகின்றன
தொலைபேசி சினுங்கையில்
உன்னை மட்டுமே நினைக்கிறேன்!

இரவு கசக்கிறது
பகல் நீள்கிறது

இந்த அண்டவெளி முழுவதும்
உன் நினைவுகளால் நிரம்பிஉள்ளன !

ஒரு ரூபாய் காசை தொலைத்த சிறுமியாய்
உன்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
தொலைந்த இடம் தெரியாமல் !

16 comments:

நட்புடன் ஜமால் said...

\\"நீ இல்லாத தருணங்கள்..."\\

நீ இல்லாவிட்டால் ஏது எனக்கு தருணங்கள் ...

நட்புடன் ஜமால் said...

ஆஹா அழகான தேடல்

ஆழமான தேடல்

priyamudanprabu said...

முகவரி இல்லாத கடிதம் போல்
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு இருக்கிறேன் !

////////

நல்ல வர்ணனை

Karthik said...

//ஒரு ரூபாய் காசை தொலைத்த சிறுமியாய்
உன்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
தொலைந்த இடம் தெரியாமல் !//

arumaiyana varigal!!!!

- இரவீ - said...

திவ்யா,
மிக அருமை, உங்களுக்கு என்னோட "சபாஷ்!!!".

Karthik said...

chk ma blog... Santa has gt smething for u!! Here is Santa's address...

http://nxgmobz.blogspot.com/2008/12/jingle-bells-jingle-bells-awards-all.html

அ.மு.செய்யது said...

சின்னதா இருந்தாலும் feel பண்ண வெக்குது..

Short and Sweet....much impressed.

Anonymous said...

அருமை . எப்படி சொல்வது....????

இயல்பான தவிப்புகள்...இயல்பான வார்த்தைகள் .....அருமை ...


இதில் சில வரிகளை என் ஓர்குட் profile கு நான் பிரதி எடுத்து கொள்ளலாமா ????

சரி என்றால் பதில் அனுப்பவும் .

அன்புடன்

கலீல்

kalilrahiman@gmail.com

நவீன் ப்ரகாஷ் said...

இல்லாத தருணங்களை மிக அழகாக உணர்த்துகின்றன வரிகள்....
அழகு திவ்யா..

நீ எழுதினதா இது..?? :))))

MSK / Saravana said...

ஐயோ பாவம்.. எங்கே தொலைச்சீங்கன்னு சொன்னீங்கன்னா நான் வந்து அந்த ஒரு ரூபா காசை தேடி தருவேன்.. :)

MSK / Saravana said...

//முகவரி இல்லாத கடிதம் போல்
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு இருக்கிறேன் !//

அழகான வரிகள்..

MSK / Saravana said...

//முதல் வாய் சோற்றில்
தவறாமல் புரை ஏறுகின்றன
தொலைபேசி சினுங்கையில்
உன்னை மட்டுமே நினைக்கிறேன்!//

செம டச்சிங்..

MSK / Saravana said...

Template is beautiful.. :)

மே. இசக்கிமுத்து said...

தேடல்களும், அதன் ஏக்கங்களும்..அழகான வரிகளில் கவிதையாக...படித்திட படித்திட தேடல்தான்...

காரூரன் said...

அழகான வலைப்பின்னலில்
கவி படைக்கும் உங்களுக்கு
எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அது என்ன "சும்மா சும்மா" ?

புதியவன் said...

//ஒரு ரூபாய் காசை தொலைத்த சிறுமியாய்
உன்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
தொலைந்த இடம் தெரியாமல் !//

தேடல் காதலில் அழகு...