Wednesday, December 31, 2008

உன் நினைவோடு....

ரோஜா பூவிலும்,
முத்தின் மணியிலும்,
குழந்தைகள் சிரிப்பிலும்,
தென்றல் காற்றிலும்,
தேனின் சுவையிலும்,
கடலின் அலையிலும்,
எந்தன் கண்ணீர்த்
துளியிலும்,
அன்பே..
உன் முகமன்றி வேறேது...?

இமைகளை மூடி
உறக்கத்தை தேடிடும் இரவில்
உயிருக்குள் உறங்கும்
இனியவனே- உன்னை
நாடி அன்றாடம் வாழும்
எனக்கு எஞ்சி இருப்பது
கனவுகள் - அதனால்
அவஸ்தையாகிய இரவுகள்..


அனைவருக்கும்
தூக்கத்திற்கு இடையில்
கனவுகள் வரும்
ஆனால் எனக்கோ
கனவுகளுக்கு இடையில்
தூக்கம் !!


அன்பு கொண்டதால்
மட்டுமே ஆட்டிப்
படைக்கும் அவலங்கள்...
காதல் கொண்டதால் மட்டுமே
காக்க வைக்கும் காலங்கள்.

...

Written by:Arya

5 comments:

நட்புடன் ஜமால் said...

\\"உன் நினைவோடு...."\\

தொடர் கவிதை ...

நட்புடன் ஜமால் said...

\\அனைவருக்கும்
தூக்கத்திற்கு இடையில்
கனவுகள் வரும்
ஆனால் எனக்கோ
கனவுகளுக்கு இடையில்
தூக்கம் !!\\

அருமை ஆர்யா.

அ.மு.செய்யது said...

//ரோஜா பூவிலும்,
முத்தின் மணியிலும்,
குழந்தைகள் சிரிப்பிலும்,
தென்றல் காற்றிலும்,
தேனின் சுவையிலும்,
கடலின் அலையிலும்,
எந்தன் கண்ணீர்த்
துளியிலும்,
அன்பே..
உன் முகமன்றி வேறேது...?///

மனதைத் தொட்டது...

நன்றி திவ்யா !!!!!!!

- இரவீ - said...

பட்டாம்பூச்சிக்கு பசிக்குது,
சோலையில் தேடுதல் !!!

புதியவன் said...

கவிதை அழகு...
வாழ்த்துக்கள் எழுதிய ஆர்யாவிற்கும்...
அதை வலையேற்றிய திவ்யாவிற்கும்...