Thursday, April 9, 2009

நட்பின் ஆழம்...!

ஒவ்வொரு நாளும்
தொடர்வண்டி பயணச்சீட்டு
எடுக்கும் வேளையெல்லாம்
நினைப்பதுண்டு
இன்றாவது உன்னை
சந்திக்கமாட்டோமா என்று

என்றாவது ஒருநாள்
நாம் சந்திக்கும் போது
நிற்க நேரமின்றி
பேசிக்கொள்ள வேண்டும்
இருவரில் ஒருவரேனும்

இல்லாதபோதும் தேடி
எடுத்த இரண்டு நிமிடத்தில்
இரண்டாண்டு நினைவுகளை
இரத்தின சுருக்கமாக
பரிமாற வேண்டும்

இரண்டாவது நிமிடத்தின்
கடைசி நொடியில்
உனது கைப்பையில்
தேடியும் கிடைக்காத காகிதத்தால்
என்றாவது இதுபோல்
பயன்பெற வேண்டுமென்று
எனது பையில் சேகரித்த
பயணசீட்டில்
பரிமாறிக்கொள்ள வேண்டும்
ஒருவரின் தொடர்புக்காண
எண்ணை மட்டும்

எனது விருப்பமெல்லாம்
இதுதான்…..
கேட்பது நீயாக இருக்க வேண்டும்
கொடுப்பது நானாக இருக்க வேன்டும்
அப்பொழுதுதான்
உன் மீதான என் நட்பின்
ஆழம் அறியப்படும் !

-அமைதிப்ரியன்

4 comments:

புதியவன் said...

//என்றாவது ஒருநாள்
நாம் சந்திக்கும் போது
நிற்க நேரமின்றி
பேசிக்கொள்ள வேண்டும்
இருவரில் ஒருவரேனும்

இல்லாதபோதும் தேடி
எடுத்த இரண்டு நிமிடத்தில்
இரண்டாண்டு நினைவுகளை
இரத்தின சுருக்கமாக
பரிமாற வேண்டும்//

யாதார்த்தமான வார்த்தைகளில் நட்பின் ஆழம் ஒரு அழகிய பதிவு...பகிர்வுக்கு நன்றி திவ்யா...

நட்புடன் ஜமால் said...

\\என்றாவது இதுபோல்
பயன்பெற வேண்டுமென்று
எனது பையில் சேகரித்த
பயணசீட்டில்
பரிமாறிக்கொள்ள வேண்டும்
ஒருவரின் தொடர்புக்காண
எண்ணை மட்டும்\\

நல்ல நட்பு அதுவும் ஆழமாக.


நல்ல பகிர்தல்.

Unknown said...

:) sweet!

venkatx5 said...

/*
பயணசீட்டில்
பரிமாறிக்கொள்ள வேண்டும்
ஒருவரின் தொடர்புக்காண
எண்ணை மட்டும்..
*/

கலக்குறீங்க அம்மணி..:D