Thursday, August 14, 2008

பாதை அறியாப் பாதங்கள்

உணவை மறந்தேன்,
உடலை மறந்தேன்,
உள்ளிருந்து அழும்
உயிரோசையை மறந்தேன்.
காலத்தை மறந்தேன்,
கண்களை மறந்தேன்,
கண்மணிக்குல் ஒளிந்திருந்தக்
கணவையும் மறந்தேன்.

காற்றுக்குக் கூட
கட்டுப் படாத நான்,
கார்ட் போர்டால் ஆன
க்யூபிக்கலுக்குள் கட்டப்பட்டேன்.

தாய்ப்பாசம் கூடத்
தவணை முறையில் தான்
தினமும் பில் எகிற
தடவிக்கொண்டே செல் ஃபோனில்
சும்மா நச்சூன்னு இருந்தது
சூப்பர்வைசரின் ஈ- மெயில்.
“லீவ் அப்ரூவ் ஆயிடுச்சுடா மாமு..”
லேட்டஸ்ட் நியூஸ் செல்லில் பறந்தது.

எப்ப போகலாம், எப்ப போகலம்
என்ற படி இளித்தது…
எப்பவோ திறந்து போடப்பட்ட
என்னுடைய ‘ட்ராவல் பேக்’.
எப்படி மறக்க முடியும்,
எகிறி குதித்து விளையாடிய
என் வீட்டு முற்றத்தை,
எதிர் வீட்டு தின்னையை.
படுத்துறங்கிய தாய் மடியை,
பட்டம் விட்ட மாடியை…
பாசத்துடன் வளர்த்த நாயை
பக்கத்து வீட்டு ஜன்னலை.

‘ஏய் எரும!ஏன்டா இத்தன நாள்?
என்னடா வாங்கிட்டு வந்த..?’
எனப்பாசமுடன் வினவும்
என் உடன் பிறப்புகள்…
எப்படி தம்பி இருக்க? என
எட்டி வந்து கேட்கும்
எதிர் வீட்டுக் குடும்பத்தார்.
என்மீது இவ்வளவு அக்கறை.?
ஒரே ஒரு நாள் கூட
ஒரு நிமிடம் போலிருந்தது.
ஓடிப்போனதே தேரியவில்லை
ஒரு வார விடுமுறை.

கண்முன்னாடியே நிற்கிறாள் இன்னும்.
கையசைத்த படி நின்ற அம்மா.
டெபிட் கார்டே வைத்திருக்கும் எனக்கு
டிக்கட் வாங்கி வழியனுப்பிய அப்பா.

மறுநாள் காலை…
மீண்டும் கேன்டீன் சாப்பாடு,
மாட்டேன் என்றது
மறத்துப் போன என் நாக்கு.
அப்போது தான் உறைத்தது
அட்டுப் போன என் மனதுக்கு
நான் மறந்தது,
உணவை மட்டுமல்ல
உணர்வையும் சேத்துத்தான் என்று!
—————————————————
இப்படிக்கு என்றும் உங்கள்,
முகவரியோடு
முகத்தையும் சேர்த்து
மாற்றிக்கொண்ட
மென் பொருள் வள்ளுனர்களில் ஒருவன்.
—வெரொனிக்.

4 comments:

Selva Kumar said...

ஆஹா..சிச்சுவேசன் சாங் நல்லாயிருக்கே.

நான் இன்னிக்கு ஊருக்கு போறேன்..


நல்ல கவிதை.

நன்றி திவ்யா.

புதுகை.அப்துல்லா said...

உங்க சொந்த அனுபவத்தில் இருந்தா சகோதரி?

Yogu said...

me jus finished coll..
gonna join an "IT" company next month??

yen bayamururthirenga??

Venkata Ramanan S said...

வள்ளுனர்களில்????