Saturday, August 16, 2008

உன் நினைவுகளில்...

மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்

பணிவான உன்
பாசத்தால் என்
தந்தையில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்...

இதைவிட
சின்ன சின்ன குறும்புகளில்

செல்லச்
சண்டைகளில்

கொஞ்ச நேர
மெளனங்களில்

கூடி சேரும்
பொழுதுகளில்

இடைவிடாத
உன் நினைவுகளில்...

இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ

இந்த உலகில் நானும்
அனாதை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்.

2 comments:

Ramya Ramani said...

\\மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்
\\

புன்னகை = பொன்னகை..

புதுகை.அப்துல்லா said...

அனாதை யாரும் இல்லை!
அவனே தான் தந்தை!

:)