Monday, August 25, 2008

காதல் தோற்குமா??

எப்படி முடிந்தது ?
என்று முறிந்தது ?
நமக்குள் பிளவும்
தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா?

மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?
கண்களால் பரிமாறிக் கொண்டதும்
விரல்களால் உணர்ந்ததும்
உதடுகளால் எதிரொலித்ததும்
அழிந்தா போய்விடும் ?

நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா?

நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்..
ஆனால்...
காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...

எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...
ஆம்..
காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....

-சுடர்விழி

8 comments:

Ramya Ramani said...

\\மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?
கண்களால் பரிமாறிக் கொண்டதும்
விரல்களால் உணர்ந்ததும்
உதடுகளால் எதிரொலித்ததும்
அழிந்தா போய்விடும் ?
\\

:))

செங்கதிர் said...

பிரமாதம்.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//கனன்று கொண்டிருப்பதை// நல்ல வரி

Yogu said...

\\நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்..
ஆனால்...
காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...\\

superb lines...

hats off..

Yogu said...

hey divya btw wats meant by மனனம்??

priyamudanprabu said...

எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...
ஆம்..
காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....
////////////

எல்லோரு இதைத்தான் சொல்லுறாங்க!!!!!!!!1

நட்புடன் ஜமால் said...

//காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...//

ஆம் தவிர்க்க முடியவில்லை.

தவிர்க்க நினைத்ததுமில்லை ...

Ravi kUMAr said...

வருத்த படுகிறேன்... உங்களை எல்லாம் இவ்வளவு நாள் சந்திக்காமல் இருந்ததற்கு... நன்றி சொல்லுகிறேன்.. இப்போது சந்திக்க வைத்த இறைவனுக்கு... ...